Wednesday, October 16, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsUKஇளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம்

இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டை காதலிப்பது குறித்த ரகசியம் வெளியானபோது கடும் ஆத்திரமடைந்ததாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வருங்கால மன்னர் என்னும் முறையில், தான் காதலிக்கும் பெண்ணின் மீது ஊடகங்களின் கவனம் திரும்பலாம், அதனால் அவர் அழுத்தத்திற்குள்ளாகலாம் என்பதால், கேட்டை காதலிப்பதை மிக ரகசியமாக வைத்திருந்தாராம் இளவரசர் வில்லியம்.

அது நியாயமும் கூட. காரணம், இளவரசர் ஹரி Caroline Flack என்னும் பெண்ணைக் காதலித்தபோது, அந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.

இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Carolineஉடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

ஆனால், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வில்லியமும் கேட்டும் விடுமுறைக்காக வெளிநாடொன்றிற்கு பனிச்சறுக்கு செய்யச் சென்றுள்ளார்கள்.

கேட் வில்லியம் ஜோடிக்குத் தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்த பாப்பராசி என்னும் புகைப்படக்காரர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க, மறுநாள் பிரித்தானிய ஊடகங்களில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதனால் வில்லியம் கடும் ஆத்திரமடைந்துள்ளார். இந்த தகவலை ராஜ குடும்ப எழுத்தாளரான Rebecca England என்பவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இதனால் கேட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொல்லை ஏற்படுமே என வில்லியம் உண்மையாகவே கவலையடைந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments