Thursday, October 17, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain Newsசிறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அர்ஜூன் அலோசியஸ்

சிறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அர்ஜூன் அலோசியஸ்

நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இருவரும் தற்போது பணித் துறைக்கு அனுப்பப்படும் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 8 மணியளவில் இரு பிரிவுகளில் இருந்து இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் இருவரும் பிற்பகல் 3.30 மணி வரை வேலைப் பிரிவில் பணிபுரிவார்கள் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவில் சிறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வற் வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் செலுத்தப்படாமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments