Thursday, October 17, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsMiddle Eastமத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் குறிப்பாக லெபனானில் இடம்பெறும் மோதல் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படுகிறது.

அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இலங்கையின் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை தூதரகங்களினூடாக வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் தங்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 011 233 8812 அல்லது 011 771 1194 என்ற வெளிவிவகார அமைச்சின் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மத்திய கிழக்கில் உள்ள தங்களது உறவினர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments