Tuesday, April 22, 2025
HomeBreaking Newsதொலைபேசி அழைப்புடன் வந்த எமன். உயிரிழந்த 23 வயது யுவதி

தொலைபேசி அழைப்புடன் வந்த எமன். உயிரிழந்த 23 வயது யுவதி

இன்று (29) அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வேலாபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள ரயில் பாதையில் குறித்த யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கு ஏற்படும் முன்னதாக குறித்த பெண் தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments