உள்நாட்டு இறைவரி ஆணையாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார்.
வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கு ஒன்றுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.