Saturday, May 24, 2025
HomeSportsஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!

ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார்.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பவுமா 8 ரன்னிலும், ஜோர்ஜி 26 ரன்னிலும், மார்கிரம் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஹென்ரிச் கிளாசன் ஒரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கார்பின் போஸ்ச் 40 ரன் எடுத்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

பாகிஸ்தானின் சுபியான் மகீம் 4 விக்கெட்டும், நசீம் ஷா, ஷாஹின் அப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments