Thursday, February 13, 2025
HomeMain NewsMiddle Eastஐ.நா. ஊழியர்கள் உள்பட 153 பேரை விடுதலை செய்த ஹவுதி

ஐ.நா. ஊழியர்கள் உள்பட 153 பேரை விடுதலை செய்த ஹவுதி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 153 பேரை விடுதலை செய்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இப்போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள்

இஸ்ரேல் மீதும் அவ்வப்போது டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

அதோடு செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி சரக்கு கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகளையும் கைது செய்துள்ளனர்.

ஏமனில் தங்கள் கட்டுப்பாடில் உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா. அமைப்பின் ஊழியர்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர்.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள ஐ.நா. ஊழியர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று விடுதலை செய்துள்ளனர்.

153 பேரை விடுதலை செய்தபோதும் ஐ.நா. ஊழியர்கள் மேலும் 7 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர்.

அதேவேளை தங்கள் அமைப்பை சேர்ந்த ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதால் ஏமனில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ஐ.நா. முன்னதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments