Wednesday, May 21, 2025
HomeMain NewsIndiaமகா கும்பமேளாவில் மீண்டும் தீவிபத்து.. பற்றி எரிந்த கூடாரங்கள்

மகா கும்பமேளாவில் மீண்டும் தீவிபத்து.. பற்றி எரிந்த கூடாரங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

செக்டார் 19 இல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் இன்று மாலை 6:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்களின் போர்வைகள் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பிரயாக்ராஜ் கூடுதல் பொது மேலாளர் பானு பாஸ்கர் தெரிவித்தார்.

முன்னதாக,

ஜனவரி 19: செக்டார் 19 இல் உள்ள கீதா பத்திரிகையாளர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 180 கூடாரங்கள் எரிந்து நாசமானது.

ஜனவரி 30: செக்டார் 22-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.

பிப்ரவரி 7: செக்டார் 18 இல் உள்ள சங்கராச்சாரியார் மார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பந்தல்கள் எரிந்து சாம்பலாயின.

பிப்ரவரி 15: செக்டார் 18-19 இல் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments