9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த தொடரின் தொடங்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதினர்.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் தொடங்கியது.
மைதானத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இரவில் கூட்டம் கொஞ்சம் அதிகரித்தது.
இந்நிலையில் 29 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற்ற நிலையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிண்டலடித்துள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் தள பதிவில், ‘பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது.
ஆனால் இன்று(நேற்று) போட்டி நடப்பதை உள்ளூர் ரசிகர்களிடம் சொல்ல மறந்து விட்டீர்களா? ரசிகர்கள் கூட்டம் எங்கே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.