Saturday, May 31, 2025
HomeMain NewsIndiaவலுப்பெற்ற தமிழக மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

வலுப்பெற்ற தமிழக மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தித் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்திப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையைத் துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாகத் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments