உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அர்ஜென்டினா அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளைச் சந்திக்கவுள்ளது .
இதன்படி குறித்த 2 போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் மெஸ்சி பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயம் காரணமாக அவர் குறித்த போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அர்ஜென்டினா அணி எதிர்வரும் 22ஆம் திகதி உருகுவே அணியையும், 26ஆம் திகதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டங்கள் இலங்கை நேரப்படி காலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.