ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது