சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
நேற்று வரை நாட்டில் 19,724 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.