இடைநிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.