Wednesday, June 11, 2025
HomeMain NewsUKபிரித்தானியாவில் வீதி விபத்து : பாதசாரி பலி - இருவர் அதிரடி கைது..!

பிரித்தானியாவில் வீதி விபத்து : பாதசாரி பலி – இருவர் அதிரடி கைது..!

பிரித்தானியாவின் ஏ52 சாலையில் நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிங்ஹாம்ஷையர் நேற்று இரவு ஏ52 சாலையில் கார் மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நர்சரி மேன் பப் அருகே சுமார் இரவு 10:20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உடனடியாக காவல்துறையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு, அந்தப் பெண் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்திற்கு காரணமானதாகக் கூறி 26 மற்றும் 43 வயதுடைய இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர்.

நாட்டிங்ஹாம்ஷையர் காவல்துறையின் தீவிர விபத்து விசாரணைப் பிரிவின் துப்பறியும் சார்ஜென்ட் பால் கிளார்க் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தொடர்புடைய டேஷ் கேம், சிசிடிவி, அல்லது கைபேசி பதிவுகள் ஏதேனும் வைத்திருப்பவர்கள் தாமதிக்காமல் முன்வந்து தகவல் தெரிவிப்பது மிகவும் முக்கியம்” என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments