பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் 2 உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான இரண்டு உலங்குவானூர்திகளில் ஒன்று எஸ்டோனியாவிலும் மற்றொன்று ஆஸ்திரியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.