அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.