Sunday, June 8, 2025
HomeMain NewsOther Countryநேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்கி மாவட்டத்தின் சினுவா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இருப்பினும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை.
நேபாளத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, மே 14 அன்று, கிழக்கு நேபாளத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments