இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி, 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.