Tuesday, June 10, 2025
HomeMain NewsTechnologyஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறியதாவது:-

இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும்.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.

என்று டிரம்ப் கூறினார்.

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது.

2025 மார்ச் வரை, இந்தியாவில் $22 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.c

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments