ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் குறைந்தது 17 பேரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 வயது சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு ஜெர்மனியின் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) ஹம்பர்க் மேயருடன் பேசியபோது தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
“பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.