உக்ரைன் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் 11 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைனின் கியேவ் மீது ரஷ்யா 250 ஆளில்லா விமானங்கள் மற்றும் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில், 6 ஏவுகணைகள் மற்றும் 245 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.