சுயேச்சை குழுவினூடாக மத்துகம பிரதேச சபைக்குத் தெரிவான 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் இன்று சந்தித்து அவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மத்துகம பிரதேச சபைக்குத் தெரிவான சுயேச்சை குழு 1 இன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.