அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்தவர்களில் இரண்டு சிறார்களும் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.