சீனாவின் இரசாயன தொழிற்சாலையொன்றில் நேற்று இடம்பெற்ற பெரிய வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக, சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
200க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் ஷான்டாங் யூடாவ் இரசாயன தொழிற்சாலைக்கு மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.