இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கெப் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, மேலதிக சிகிச்சைக்காக கிரியெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் எபிடவல, கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.