இளவரசி டயானாவின் குழந்தை பருவ இல்லம் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இளவரசி டயானாவின் முன்னாள் குடும்ப எஸ்டேட் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீடு தீ விபத்தில் முற்றிலும் அழிந்துள்ளது.
இது தீ வைக்கப்பட்டிருக்கலாம் என டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏர்ல் ஸ்பென்சர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தீப்பிடித்து எரிந்த கட்டிடத்தின் படங்களையும், மறுநாள் காலையில் அதன் எரிந்த சிதிலங்களின் படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களின் அயராத முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். “யாராவது இதை ஒரு வேடிக்கையான செயலாகக் கருதுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றும் அவர் மனம் வருந்தினார்.
நார்தாம்ப்டன்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அளித்த தகவலின்படி, புதன்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் கிங்ஸ்டோர்பில் உள்ள மில் லேன் பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தீ மேலும் பரவாமல் தடுக்க நான்கு குழுக்கள் இணைந்து தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தின.”
ஒரு குழு, நீர் தெளிக்கும் வாகனத்துடன், புதன்கிழமை பிற்பகல் வரை சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து, எஞ்சியிருந்த தீப்பொறிகளை அணைத்தது. பின்னர் பிற்பகல் 1:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.