Tuesday, June 10, 2025
HomeMain NewsSri Lankaகொழும்பை தாக்கிய மினி சூறாவளி – ரயில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பை தாக்கிய மினி சூறாவளி – ரயில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு நகரை நேற்று இரவு தாக்கிய மினி சூறாவளியால் பல வீதிகளில் மரக்கிளைகள் உடைந்து விழுந்துள்ளது.

அத்துடன் வீடுகளின் கூரைகள் உடைந்து, சிறு கட்டடங்கள் சேதமடைந்து, விளம்பரப் பலகைகள் தரையில் விழுந்துள்ளது.

புயலின் தாக்கத்தால் கொழும்பு நகரின் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் நேற்று இரவு முதல் வீசிய பலத்த காற்று காரணமாக வந்துராவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மரம் ஒன்று விழுந்துள்ளதாகவும், இதனால் பிரதான பாதையில் இரண்டு ரயில் பாதைகளும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வடக்கு பாதையில் மட்டக்களப்பு இரவு அஞ்சல் ரயில் மற்றும் பிரதான பாதையில் ரம்புக்கனை நோக்கி செல்லும் ரயில்களின் முன்னோக்கி செல்லும் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரம்புக்கனை நோக்கி செல்லும் ரயில் தற்போது ராகமவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் கட்டுமானங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments