நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.
பின்னர், நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் திகதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும், தங்களது மகன்களுக்கு என எப்போதும் ஒன்றாக உறுதுணையாக இருந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாத்ராவின் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து ஆனபோதும் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். அதன்புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில், மகன் யாத்ராவிவன் பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பங்கேற்றனர்.
இதன் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,”பெருமைக்குரிய பெற்றோர்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.