Monday, June 9, 2025
HomeMain NewsAmericaசீன அச்சுறுத்தலிருந்து இந்திய - பசுபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்

சீன அச்சுறுத்தலிருந்து இந்திய – பசுபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்

சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதில் இந்திய-பசுபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தார்.

இதுதொடா்பாக நேற்று (31) சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அவா் கூறியதாவது:

சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக வெளிநாடுகளில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தும்.

சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதில் இந்திய-பசுபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். அந்த நாடுகள் தன்னந்தனியாக விடப்படாது. சீனாவால் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. அதை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது என்றார்.

எனினும் மாநாட்டில் சீனா தரப்பில் கலந்துகொண்ட அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக துணைத் தலைவரும், ரியா் அட்மிரலுமான ஹு காங்ஃபெங் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அவா் பேசுகையில், ‘சீனா மீது அமெரிக்கா அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சில குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, திரிக்கப்பட்டவை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments