பிரமிட் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் தேசிய விழிப்புணர்வு வாரம் இன்று ஆரம்பமாகிறது.
அதன்படி, ‘பெருங்கவலையின் உச்சகட்டம் : சூழ்ச்சியான பிரமிட் திட்டம்’ என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு வாரம் முன்னெடுக்கப்படுகிறது.
