இந்தியாவின் அஹ்மதாபாத் நகரில் 26 கல்லறைகளின் மத்தியில் உணவகமொன்று இயங்கி வருகின்றது.
உள்ளூர்வாசிகள் உட்பட பல பிரபலங்களும் இந்த உணவகத்திற்கு வருகை தருகின்றனர்.
குறித்த உணவகம் கல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால், அங்கு உணவு உட்கொள்வதற்கு அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கு உணவு உட்கொண்டால் அதிர்ஷ்டம் எனவும் நம்பப்படுகின்றது.
கடந்த காலங்களில் பிரபல ஓவியர் எம்.எப் ஹுசைன் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இங்கு தேநீர் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
