Monday, February 2, 2026
HomeHealthசிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீர்ப்பைக்கு தீங்கு விளைவிக்கும்- டாக்டர்கள் எச்சரிக்கை

சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீர்ப்பைக்கு தீங்கு விளைவிக்கும்- டாக்டர்கள் எச்சரிக்கை

சிறுநீரை அதிகநேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் பலரும் பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழித்தால் கிருமிகளால் பாதிப்பு வரக்கூடும் என கருதி பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது பொது இடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதையோ தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு சிறுநீரை அடக்குவது அல்லது நீண்ட நேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் அரை குந்து நிலை முழு சிறுநீர் பை காலியாவதை தடுக்கிறது. சிறுநீர் திரும்புதல், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இது சிறுநீர்ப்பை அழுத்தத்தை அதிகரிக்கிறது. மற்றும் சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், சிறுநீர்ப்பை எரிச்சல் மற்றும் நீண்டகால பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும் சிறுநீர்ப்பை தசைகள் ஏற்படும் செயல்படும் விதத்தை பாதிக்கிறது. சிறுநீர் சேமிப்பது பாக்டீரியாக்கள் வளர ஒரு நல்ல சூழலை வழங்குகிறது. இது மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறுநீரக தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் அல்லது சரியாக உட்காராவிட்டாலும் 2 பழக்கங்களிலும் இடுப்பு, தலை, தசை பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் மேலும் கூறுகையில், பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது. முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன என்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular