Monday, February 2, 2026
HomeMain NewsIndiaஇந்தியா-பிஜி பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த முடிவு : 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியா-பிஜி பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த முடிவு : 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

சிறிய தீவு தேசமான பிஜியுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இன்று (ஆகஸ்ட் 25) புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஜி நாட்டின் பிரதமர் சிடிவேனி லிகமமடா ரபுகாவுடன் (Sitiveni Ligamamada Rabuka), இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை மேம்படுத்த முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

சீனாவின் பசிபிக் பகுதிகளில் அதிகரிக்கும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக, இந்தியா பிஜியுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விரும்புகிறது.

மோடி – ரபுகா பேச்சுவார்த்தைக்கு பின்னர், 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதில் பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.

இந்தியா பிஜிக்கு பயிற்சி மற்றும் உபகரண உதவிகளை வழங்கும் என மோடி உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், பேரழிவுகளுக்கான பதிலடி நடவடிக்கைகளுக்கும் இந்தியா உதவ முன்வந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular