மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மலேசியாவைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தத் தீர்மானித்துள்ளது.
இந்த ஆணுறை தயாரிப்புகளுக்கான மூலப்பொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றின் விலை 30% அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்தப்படும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது உற்பத்திச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஐந்து பில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகளைச் சர்வதேச சந்தைக்கு விநியோகம் செய்கிறது.
