பொந்தியான் – குக்குப் சாலையில் சோதனைச் சாவடியில் இருந்து தப்பி ஓடியவரை 15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று காவல்துறை கைது செய்தது.
37 வயதான அந்த சந்தேக நபர், ஜாலான் கம்போங் சுங்கை காராங் சாலையில் நடந்த போக்குவரத்து சோதனையின்போது நிறுத்தும்படி விடுக்கப்பட்ட உத்தரவுகளைப் புறக்கணித்தார்.
அதற்குப் பதிலாக, அவர் வாகனங்களை முந்திச் சென்றும், மற்ற சாலைப் பயனாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியும் அதிவேகமாகச் சென்றார்.-
அதிகாரிகள் அந்த வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று, ஜாலான் பொந்தியான்–குக்குப் சாலையின் 15-வது கி.மீ. தூரத்தில் நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் சட்டவிரோதப் பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை, ஆனால் அவர் மெத்தாம்பெத்தமைன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது
போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அரசு ஊழியருக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய இரண்டு முந்தைய குற்றங்களில் ஈடுபட்டுள்ள சந்தேக நபர் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், போக்குவரத்து விதிமீறலுக்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், RM5,000 முதல் RM15,000 வரையிலான அபராதமும், அத்துடன் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் பிற தண்டனைகளும் விதிக்கப்படலாம்!
