மலேசியாவில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதி இரு பெண்கள் பலி!

மலேசியாவின் கிள்ளான் பண்டார் பாரு பகுதியில் நேற்று இரவு நடந்த விபத்தில், நடந்து சென்ற இரண்டு சகோதரிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்கள் 57 மற்றும் 62 வயதுடையவர்கள் என்றும், காயமடைந்தவர் 17 வயது சிறுவன் என்றும் வட கிள்ளான் மாவட்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். அந்தச் சிறுவன், உயிரிழந்த பெண்களில் ஒருவரின் மகன் எனவும் கூறப்பட்டது.

இந்த விபத்து குறித்து நேற்று இரவு 8.14 மணியளவில் பொலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், வெள்ளி நிற SUV வாகனம் Jalan Meru பகுதியில் இருந்து Bandar Baru Klang நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நடந்து சென்ற மூன்று பேர்மீது மோதியதாக நம்பப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு, வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இரு பெண்களும் தலையில் கடுமையான காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 17 வயது சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த குடும்பத்தினர் அருகிலுள்ள உணவகத்திற்கு இரவு உணவுக்காக சென்றுகொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles