மலேசியாவின் கோல கங்சாரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர் குழுவால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
மாணவர்களில் ஒருவரின் முடியை ஆசிரியர் வெட்டியதால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
பேராக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை குழுவின் தலைவர் கைருதீன் அபு ஹனிபா, இவ்விவகாரம் குறித்து மாநில கல்வித் துறையிடமிருந்து விரிவான அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, இந்தச் சம்பவத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது உண்மையாக இருந்தால், இது ஒரு முறையற்ற செயலாகும். ஏனெனில் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் கல்வியாளர்கள் என்று இன்று செரி இஸ்கந்தரில் உள்ள சுல்தான் யூசுஃப் இசுதீன் ஷா மசூதியில் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு அவர் மேற்கண்டவாறு கூறினார்.
