பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது வழங்கி கௌரவித்த ஸ்லோவாக்கியா

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், அந்நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார்.

வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

1993ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திர நாடாக உருவெடுத்த பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இந்த உயர்மட்டக் குழுவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles