மலேசியாவில் இரு வேறு விபத்துகளில் சிக்கி இரு சகோதரிகள் உட்பட நால்வர் பலி!

மலேசியாவின் பஹாங்கில் நேற்று மாலை, ஒரு மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு வீதி விபத்துகளில் 2 சகோதரிகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்; மேலும் எழுவர் காயமடைந்தனர்.

முதல் விபத்து, மாரான் எனுமிடத்தில் மாலை மணி 6.45 அளவில் நிகழ்ந்தது. 23 வயதுடைய பெண் மற்றும் 19 வயதுடைய அவரது தங்கை ஆகிய இருவரும் பயணம் செய்த வாகனம் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது அவர்கள் சென்ற வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்ததில், அந்த இரு சகோதரிகளும் நெரிசல்களுக்குள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்திற்குள், பெக்கான், ஜாலான் குவாந்தான்-செகாமாட் வீதியில் மற்றொரு விபத்து நிகழ்ந்தது.

சினி தீயணைப்பு நிலையத்திற்கு அருகே மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் எழுவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரு விபத்துகள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles