கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் பலி!

மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தனர்.

கொங்கோவில் போக்குவரத்துக்காக படகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளை, உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் அவ்வப்போது படகு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கசாய் மாகாணத்தில் உள்ள ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை படகு சென்றுகொண்டிருந்தது.

அந்த படகில் பாடசாலை மாணவர்கள் உள்பட 200 இற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். ஆற்றின் மையப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்த அணைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த சம்பவத்தில் படகில் பயணித்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 100 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles