வட கொரிய அதிபருக்கு மற்றொரு வாரிசா? தகவல்களை திரட்டும் தீவிர முயற்சியில் தென்கொரியா

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களை சேகரிக்க தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் , நாட்டின் அடுத்த அதிபராக கிம்மின் மகள் ‘கிம் ஜூ ஏ’ (Kim Ju Ae) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே மிகவும் உறுதியாக உள்ளதாகப் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் தந்தை வழி சமூக அமைப்பும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலையும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இருப்பினும், இதுவரை கிம்மின் மூத்த மகன் அல்லது மூன்றாவது குழந்தை குறித்து எவ்வித உறுதியான வரலாற்றுச் சான்றுகளோ அல்லது பொதுவெளி நகர்வுகளோ வெளியாகவில்லை.

மாறாக, கிம் ஜோங் உன்னின் சுமார் 13 வயது நிரம்பிய மகள் ‘கிம் ஜூ ஏ’, சமீபகாலமாக நாட்டின் முக்கிய இராணுவக் கூட்டுப் பயிற்சிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அரசாங்க நிகழ்வுகளில் அதிபருக்கு நிகராகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

வடகொரிய அரசு ஊடகங்களும் அவரை “மிகவும் மதிப்பிற்குரிய வழிகாட்டி” (Respected Guide) என வாரிசுக்கான சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் உளவுத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, கிம் ஜூ ஏ வாரிசுப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டார் என்றும், வடகொரியாவின் நான்காம் தலைமுறை அதிகாரத்தை அவரே கைப்பற்றுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வடகொரியாவில் மூத்த ஆண் வாரிசு உள்ளாரா என்ற கேள்விகள் நிலவியபோதிலும், இராணுவப் படைகளின் ஆதரவு மற்றும் அதிகாரப்பூர்வ நகர்வுகள் அனைத்தும் கிம் ஜூ ஏ-வை நோக்கியே நகர்வதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles