அன்னை மடியில்12 SEP 1934, இறைவன் அடியில்07 MAR 2023
கட்டட பரிசோதகர் இலங்கைக் கல்வித் திணைக்களம்
வயது 88
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) கொக்குவில் கிழக்கு, Sri Lanka Auckland, New Zealand நல்லூர், Sri Lanka
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட உயர்திரு வல்லிபுரம் சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று முருகன் திருவடிகளில் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பாலசிங்கம்(மலேரியா தடுப்பு கட்டுப்பாட்டு அதிகாரி), பராசக்தி, பாக்கியலட்சுமி மற்றும் V.S.குலசிங்கம்(முன்னாள் இலங்கை வங்கி அதிகாரி), மல்லிகாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(கணித விரிவுரையாளர் நியூசிலாந்து), கிருபா(வாகன தொழிநுட்ப ஆலோசகர் – ஜேர்மனி), உமாதேவி(இணை அதிபர் EAST FM வானொலி மற்றும் கீதவாணி வானொலி கனடா), ஜெயதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடா ராஜ்குமார்(அதிபர் EAST FM வானொலி மற்றும் கீதவாணி வானொலி கனடா), ஜானகி(நியூசிலாந்து), சுதா(ஜேர்மனி), ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிரமலை(இளைப்பாறிய மலேரியா தடுப்பு உத்தியோகத்தர்- அவுஸ்திரேலியா), விஜயலட்சுமி(அவுஸ்திரேலியா), திலகவதி(கனடா), இந்திரா, லில்லி, செல்வராணி, கருணாநிதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தவமணி, நடராசா, கனகசபை(D.O) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
தினேஷ், நிரோஷ், உமேஷ், அஜித்தன், அஞ்சனா, அனுஷா, லவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2023 புதன்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மணோன்மணி அம்மன் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.