Sangathy
News

X-Press Pearl: கடற்றொழிலாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க மேலும் 1,514 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது

Colombo (News 1st) X-Press Pearl கப்பல் கடலில் மூழ்கியதால், கடற்றொழிலில் ஈடுபட தடை விதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க மேலும் 1,514 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது.

கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால் இந்த நிதி திறைசேரிக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்காம் கட்டத்தின் கீழ் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு இந்த நிதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

16,867 குடும்பங்கள் இந்த நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

நாட்டின் கடற்றொழிலில் மறைமுகமாக ஈடுபடும் குடும்பங்களுக்கும் இந்த நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.

நான்காவது கட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையுடன், மொத்தமாக 3000 மில்லியன் ரூபா நிதி கடற்றொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 3,30,000 ரூபா முதல்  5,00,000 வரையிலான தொகை, மீனவர் ஒருவருக்கு நட்ட ஈடாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி – கெஹெலிய ரம்புக்வெல்ல

Lincoln

செய்யறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

John David

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற தீர்மானம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy