Sangathy
News

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டரை வயது குழந்தை

Colombo (News 1st) இரண்டரை வயது குழந்தையொன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்.இளவாலை – வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று(09) மாலை இந்த சம்பவம் பதிவானதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று(10) கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளது

Lincoln

BASL contemplates legal action against HSZ gazette

Lincoln

மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதி விபத்து; வாழைச்சேனை இளைஞர்கள் இருவர் பலி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy