Sangathy
News

இராகலை தோட்ட குடியிருப்பில் தீ

Colombo (News 1st) இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டக் குடியிருப்பு தொகுதியில் இன்று(05) காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்த குடியிருப்புத் தொகுதி 20 குடியிருப்புகள் அடங்கிய இரு பகுதிகளை கொண்டதாகும்.

06 ஆம் இலக்க தொடர் வீட்டு லயன் குடியிருப்பு தொகுதியில் இன்று(05) காலை 10.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

தீப்பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக 20 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Colombo (News 1st) நாட்டின் முன்னணி வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 92 கணக்குகளில் குறித்த பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக வங்கியின் தலைவர் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கிணங்க, சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிணை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ள 92 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

Lincoln

CEB to go ahead with questionable LNG deal

Lincoln

Legislation of Media Guidelines Under Article 104b(5)(A) Of the Constitution Of The Democratic Socialist Republic Of Sri Lanka

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy