Colombo (News 1st) இலங்கையின் தேயிலை தொழிற்றுறையின் முன்னேற்றத்திற்காக பாரியளவு பங்காற்றிய டில்மா(Dilmah) நிறுவுனர் மெரில் J.பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் இன்று(20) காலை இயற்கை எய்தினார்.
மெரில் J.பெர்னாண்டோ 1970 ஆம் ஆண்டில் டில்மா தேயிலை நிறுவனத்தை ஆரம்பித்தார்.
உயர் தரத்திலான இலங்கை தேயிலையை பல நாடுகளுக்கும் கொண்டுசேர்த்த முதலாமவர் என்ற சிறப்பு இவரையே சாரும்.
அவரால் உருவாக்கப்பட்ட Dilmah தேயிலை, வெறுமனே ஒரு நிறுவனமாக மாத்திரமின்றி இலங்கையின் தேயிலையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதிலும் பெரும் பங்காற்றியது.