Sangathy
News

வெலிபாரவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Colombo (News 1st) தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட – வெலிபாரவில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வெலிபாரவை சேர்ந்த 41 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

வெலிபாரவில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளங்காணப்படாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஊழியர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்திப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி

Lincoln

Taliban attack on Afghan government compound kills 10, wounds dozens

Lincoln

Case of statutory rape: Ex-Akuressa PS Chairman acquitted and discharged

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy