Sangathy
News

இலங்கை – பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட : மழையால் தடைப்பட்டுள்ள 2ஆம் நாள் ஆட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய(25) இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மேலும் 33 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டது.

முற்பகல் 11.25 அளவில் மழை பெய்ய ஆரம்பித்ததுடன் பிற்பகல் ஒரு மணி வரை ஆட்டத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதற்கமைய 12 ஓட்டங்களால் முன்னிலை அடைந்துள்ளது.

அப்துல்லா ஷாபிக் 87 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் பாபர் அசாம் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாளான நேற்று(24) 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திர விவகாரத்தால் இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள்

John David

Pakistan’s president by passes EC and declares poll date in provinces

Lincoln

24 மணித்தியாலங்களில் 730 சந்தேகநபர்கள் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy