Colombo (News 1st) விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப் பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளின் உதவியுடன் நேற்றிரவு(02) தீ அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளை நாரங்கல மலைக்கு சிலர் தீ வைத்துள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் இதுபோன்ற பல தீ விபத்துகள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.